தமிழ்த் தேசிய அரசியலின் பின்னடைவுக்கு சம்பந்தனும் சுமந்திரனுமே காரணமானவர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாள் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களின் போது இனப்பிரச்சினைக்கு தீர்வாக சம்ஸ்டித் தீர்வைக் கோரி வாக்குப் பெற்றுவிட்டு தேர்தல் முடிந்த கையோடு மக்களிடம் பெற்ற ஆணைக்கு மாறாகவே அவர்களுடைய செயற்பாடு அமைந்திருந்தது.
பிரதான கட்சியாக இருந்த தமிழரசுக்கட்சி வேகமாக தனது செல்வாக்கை இழந்து வந்திருக்கிறது. சம்பந்தனின் மறைவுக்கு பின்னர் தமிழரசுக் கட்சியில் பிரதான முடிவுகளை எடுப்பதாக அடையாளப்படுத்தப்பட்ட சுமந்திரன் அவர்கள் மக்களால் நிராகரிப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார். இவை முக்கியமான விடயம். 2001 இல் இருந்து முக்கியமான ஒரு தரப்பாக இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் படிப்படியாக தமது செல்வாக்கை இழந்திருப்பதென்பது முற்றிலும் கொள்கைக்கு புறம்பாக செயற்பட்டமையே பிரதான காரணமாகும்.